Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: நிச்சயம் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ஆகாஷ் சோப்ரா!

நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
IPL 2021 Final: Aakash Chopra makes his predictions for the CSK-KKR final clash
IPL 2021 Final: Aakash Chopra makes his predictions for the CSK-KKR final clash (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 15, 2021 • 01:18 PM

ஐபிஎல் 14ஆவது சீசனின் இறுதிப் போட்டியானது இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற லீக் மற்றும் பிளே ஆப் சுற்று போட்டிகளின் முடிவில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
 
முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தோனி கோப்பையுடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 15, 2021 • 01:18 PM

அதேவேளையில் கொல்கத்தா அணியும் பலம் வாய்ந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதால் அவர்களும் கோப்பையை கைப்பற்ற மும்முரம் காட்டுவார்கள். இதன் காரணமாக இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

Trending

இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற போவது எந்த அணி ? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர் “என்னை பொறுத்தவரை இந்த இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என கருதுகிறேன். ஏனெனில் தோனி தலைமையிலான சென்னை அணி இந்த ஆண்டு தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எந்த இடத்திலும் ஒரு வீரருக்கு மற்றொரு வீரர் தாங்கி பிடித்து விளையாடுவதால் நிச்சயம் சென்னை அணிக்கு பலம் என்றே கூறுவேன்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதேவேளையில் கொல்கத்தா அணியிலும் சரி, சென்னை அணியிலும் சரி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. அவர்கள் இருவரும் 30 ரன்களுக்கு மேல் அடிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement