
IPL 2021: Gavaskar Condemns The Third Umpire After The Wide Ball Controversy In DC vs CSK (Image Source: Google)
ஐபிஎல் டி20 தொடரில் உள்நாட்டு நடுவர்களின் சொதப்பலான தீர்ப்புகள் பல நேரங்களில் போட்டியின் முடிவையே மாற்றிவிடுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்துள்ள இந்தக் காலத்தில் மைதானத்தில் பல்வேறு கோணங்களில் பல கேமராக்கள் இருந்தபோதிலும்கூட மூன்றாவது நடுவர் தொடர்ந்து சொதப்பி தவறான முடிவுகளை வழங்குகிறார்.
கள நடுவரும் சில நேரங்களில் தவறான முடிவை வழங்கி போட்டி திசை மாற வழிவகுத்து விடுகிறார். வைட் இல்லாத பந்துவீச்சு வைட் கொடுத்தலும், வைடாக வீசப்பட்ட பந்துக்கு வைட் இல்லை என்று கூறுவதும் சிக்கலான நேரத்தில் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்துவிடும்.
இந்த ஐபிஎல் சீசனில் நடுவரின் சொதப்பல் தீர்ப்புகள் அவ்வப்போது தொடர்ந்து வரும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டத்திலும் தவறான தீர்ப்பை வழங்கினர்.