Advertisement

நடுவரின் தீர்ப்பு போட்டி முடிவை மாற்றிவிடக்கூடாது - சுனில் கவாஸ்கர்!

ஐபிஎல் டி20 தொடரில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையே நடுவர் எடுக்கும் முடிவுகள் வேறுபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 05, 2021 • 18:23 PM
IPL 2021: Gavaskar Condemns The Third Umpire After The Wide Ball Controversy In DC vs CSK
IPL 2021: Gavaskar Condemns The Third Umpire After The Wide Ball Controversy In DC vs CSK (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் டி20 தொடரில் உள்நாட்டு நடுவர்களின் சொதப்பலான தீர்ப்புகள் பல நேரங்களில் போட்டியின் முடிவையே மாற்றிவிடுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்துள்ள இந்தக் காலத்தில் மைதானத்தில் பல்வேறு கோணங்களில் பல கேமராக்கள் இருந்தபோதிலும்கூட மூன்றாவது நடுவர் தொடர்ந்து சொதப்பி தவறான முடிவுகளை வழங்குகிறார்.

கள நடுவரும் சில நேரங்களில் தவறான முடிவை வழங்கி போட்டி திசை மாற வழிவகுத்து விடுகிறார். வைட் இல்லாத பந்துவீச்சு வைட் கொடுத்தலும், வைடாக வீசப்பட்ட பந்துக்கு வைட் இல்லை என்று கூறுவதும் சிக்கலான நேரத்தில் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்துவிடும்.

Trending


இந்த ஐபிஎல் சீசனில் நடுவரின் சொதப்பல் தீர்ப்புகள் அவ்வப்போது தொடர்ந்து வரும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டத்திலும் தவறான தீர்ப்பை வழங்கினர்.

தேவ்தத் படிக்கல் கையில் பட்டு விக்கெட் கீப்பர் ராகுல் பிடித்த பந்துக்கு மூன்றாவது நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். டிவி ரீப்ளேயில் அவுட் எனத் தெரிந்தும் மூன்றாவது நடுவர் சொதப்பினார்.

இந்நிலையில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் பிராவோ அவுட்சைட் ஆஃப் திசையில் பந்து வீசினார். ஆனால், பந்து ஆடுகளத்தில் படாமல் சென்றது. இதுகுறித்து மூன்றாவது நடுவர் வைடும் தரவில்லை, நோ-பாலும் தரவில்லை. இது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

நடுவரின் சொதப்பலான தீர்ப்பு குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசுகையில், “பிராவோ வீசிய பந்து நோ-பால் எனத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இந்த முடிவு குறித்து டிவி நடுவர்கள் இருவிதமான முடிவுகளை எடுக்கிறார்கள். இந்தச் சூழலில் வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வேறுபாட்டை நடுவர் முடிவுகள் ஏற்படுத்திவிடக் கூடாது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அது நடக்கவும் கூடாது. இதுபோன்ற முடிவுகள் போட்டியை மாற்றிவிடக் கூடாது. நல்ல விஷயம் இந்த ஆட்டத்தில் டெல்லி வென்றது. ஏனென்றால், நடுவரின் தவறான முடிவு போட்டியின் முடிவை பாதிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement