
மும்பை அணியின் இளம் அதிரடி வீரரான இஷான் கிஷன் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கும் தேர்வாகி விளையாடிய அவர் தொடர்ந்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பட்டியலிலும் இடம் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷன் கிஷன் கடந்த இரு போட்டிகளாக மும்பை அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
இதனால் அவரது மோசமான ஃபார்ம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய அணி நிர்வாகத்திற்கும் கவலை அளித்தது. இந்நிலையில் நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கி 25 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரி என 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மோசமான ஃபார்ம்மில் இருந்து தற்போது மீண்டும் இஷான் கிஷன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மும்பை அணிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் மகிழ்ச்சியான விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக மனரீதியாக வீரர்களின் நலம் என்பது முக்கியம். அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அவருக்கு நல்ல தன்னம்பிக்கை அளிக்கும்.