Advertisement

வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - தோனி புகழாரம்!

ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பிராவோ மற்றும் ஜடேஜாவே முக்கிய காரணம் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 25, 2021 • 10:24 AM
IPL 2021: I call Dwayne Bravo my brother, reveals MS Dhoni
IPL 2021: I call Dwayne Bravo my brother, reveals MS Dhoni (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 35 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி கோலி மற்றும் படிக்கல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

Trending


அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “இந்த போட்டியின் போது பணி வரும் என்று நாங்கள் கவலைப்ட்டோம். ஆனால் அந்த பிரச்சனை இல்லை. பெங்களூர் அணி முதல் 8,9 ஓவர்களில் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்தனர். அதன் பிறகு மைதானம் கொஞ்சம் ஸ்லோ ஆனது. ஜடேஜா இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று பிராவோவை நான் முன்கூட்டியே கொண்டு வந்தேன். ஏனெனில் தொடர்ச்சியாக நான்கு ஓவர்களை இதுபோன்ற மைதானங்களில் வீசுவது கடினம். அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினர். இங்குள்ள மூன்று மைதானங்களும் ஒவ்வொரு மாதிரியான தன்மையுடையவை.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதிலும் ஷார்ஜா மைதானம் மிகவும் ஸ்லோவான ஒரு ஆடுகளம். எனவே நாங்கள் பேட்டிங் செய்யும்போது ரைட் லெஃப்ட் காம்பினேஷன் வேண்டும் என்று நினைத்து அதன்படியே களம் இறங்கினோம். பிராவோவின் பந்துவீச்சு இந்த போட்டியில் பெரிய அளவில் மாற்றத்தை தந்தது” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement