Advertisement

ஐபிஎல் 2021: மோர்கன், திரிபாதி அபாரம்; 5 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி, பஞ

Bharathi Kannan
By Bharathi Kannan April 26, 2021 • 23:15 PM
IPL 2021: KKR beat Panjab by 5 wickets
IPL 2021: KKR beat Panjab by 5 wickets (Image Source: Google)
Advertisement


ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி, பஞ்சாப் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரர்கள் ராகுல், கெய்ல், பூரன், ஹென்ட்ரிக்ஸ், ஷாரூக் கான் என அனைவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின் கடைசி ஓவர்களில் கிறிஸ் ஜோர்டன் ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Trending


இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நிதீஷ் ராணா, சுப்மன் கில், சுனில் நரைன், ரஸ்ஸல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கன் - ராகுல் திரிபாதி அணி இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இதில் திரிபாதி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஈயான் மோர்கன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தி கேகேஆர் அணி வெற்றிபெற்று அசத்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement