
நடப்பு ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
இதன் காரணமாக அடுத்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது விளையாடிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக களத்தில் இருந்த நடுவர் மூன்று தவறான முடிவுகளை வழங்கினார். இந்த முடிவுகளின் மூலம் பெங்களூர் அணிக்கு 2 ரன்கள் வீணாகின.