
IPL 2021 Likely To Shift Entirely To Mumbai: Report (Image Source: Google)
இந்தியாவில் கரோனா வைரஸின் 2ஆம் அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஆறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேகேஆர் அணியை சேர்ந்த வீரர்களுக்கு நேற்றைய தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் நடைபெற இருந்த கேகேஆர் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மீதமிருக்கும் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளையும் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.