
துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களையும், ரிஷப் பண்ட் 51 ரன்களையும் குவித்தனர். பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸின் விக்கெட்டை பறிகொடுத்தது.
அதன்பின்னர் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். கெய்க்வாட் 73 ரன்களையும், ராபின் உத்தப்பா 63 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதிகட்டத்தில் கடைசி ஓவரின் போது 13 ரன்கள் தேவைப்பட்டது அப்போது களத்தில் இருந்த தோனி தொடர்ச்சியாக 3 பவுண்டரி விளாசி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.