Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: பயிற்சிக்கு திரும்பிய அஸ்வின், பந்த், ரஹானே!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ரிஷப் பந்த், அஸ்வின், ரஹானே உள்பட 7 வீரர்கள் தனிமைப்படுத்துதலை முடித்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 18, 2021 • 16:01 PM
IPL 2021: Pant, Ashwin, Prithvi begin training with Delhi Capitals
IPL 2021: Pant, Ashwin, Prithvi begin training with Delhi Capitals (Image Source: Google)
Advertisement

14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின், ரிஷப் பந்த், அஜிங்கியா ரஹானே, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா ஆகியோர் அமீரகம் சென்று ஆறுநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

Trending


தற்போது தனிமைப்படுத்துதலை முடித்துள்ள இந்த 7 வீரர்களும் சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் பயிற்சி பெறும் புகைப்படங்களை அந்த அணி நிர்வாகம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி செப்டம்பர் 22ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement