Advertisement

ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை 134 ரன்களில் சுருட்டிய பஞ்சாப்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 07, 2021 • 17:28 PM
IPL 2021: PBKS restrict CSK by 134 runs
IPL 2021: PBKS restrict CSK by 134 runs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 12, மொயீன் அலி ரன் ஏதுமின்றியும், உத்தப்பா, ராயூடு ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அணிக்கு உதவினார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, டூ பிளெசிஸும் 76 ரன்களுடன் வெளியேறினார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பின்னர் இறுதியில் டுவைன் பிராவோ, ஜடேஜா இணை சில பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement