
IPL 2021 Phase 2 window confirmed, will be held between Sep 15 to Oct 15 in UAE (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது.
எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது. உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.