Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: ஹர்ஷல், சஹால் அசத்தல்; ஆர்சிபிக்கு 150 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 29, 2021 • 21:25 PM
IPL 2021: RCB restricted RR by 149 runs
IPL 2021: RCB restricted RR by 149 runs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தன் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச தீர்மானித்தார். 

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு எவின் லூயிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 

Trending


இதில் ஜெய்ஸ்வால் 31 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எவின் லூயிஸ் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய சாம்சனும் அதிரடியில் ஈடுபட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இதையடுத்து 58 ரன்களில் லூயிஸ் ஆட்டமிழக்க, 19 ரன்னில் சாம்சனும் விக்கெட்டை இழந்தனார். அடுத்த வந்த வீரர்கள் ஆர்சிபியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

இறுதியில் கிறிஸ் மோரிஸ் சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளையும், அர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement