
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புது முயற்சியை கையாளவுள்ளது.
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் இயற்கையையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரே ஒரு போட்டியில் பச்சை நிறத்தினாலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு போட்டியில் நீல நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி அமீரகத்தில் நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் தொடரில், வரும் 20ஆம் தேதியன்று ஆர்சிபி அணி கேகேஆர் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி நீல நிற ஜெர்ஸியை பயன்படுத்தவுள்ளது.