Advertisement

ஐபிஎல் 2021: துபாய்க்கு படையெடுத்து ஆர்சிபி!

அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனி விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 29, 2021 • 18:35 PM
IPL 2021: Royal Challengers Bangalore Contingent Boards Flight To Dubai
IPL 2021: Royal Challengers Bangalore Contingent Boards Flight To Dubai (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, மீதமுள்ள போட்டிகள் செப்ம்டபர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கபதறாக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இதில் பங்கேற்பதற்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஆகஸ்ட் 21 முதல் பெங்களூருவில் தனிமையில் இருந்தனர். 

Trending


இதையடுத்து துபாய் செல்லும் அவர்கள் 6 நாள்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அதன்பிறகே, அந்த அணி பயிற்சியைத் தொடங்க முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை செப்டம்பர் 20ஆம் தேதி அபுதாபியில் எதிர்கொள்கிறது. புள்ளிகள் பட்டியலில் 5 வெற்றிகள், 2 தோல்விகளுடன் பெங்களூரு அணி தற்போது 3ஆவது இடத்தில் உள்ளது.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன், பின் ஆலென் மற்றும் ஸ்காட் குக்கலீன் ஆகியோர் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடாததால் அவர்களுக்குப் பதில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, சிங்கப்பூரின் டிம் டேவிட் மற்றும் இங்கிலாந்தின் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement