
IPL 2021: RR contributes Rs 7.5 crore towards Covid relief (Image Source: Google)
இந்தியாவில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.
கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் விளையாடி வரும் எட்டு அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கிறது. அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர், அணி நிர்வாகிகள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் என அனைவரும் இணைந்து இந்த நிதியில் பங்களிப்பு செய்துள்ளனர்.