ஐபிஎல் 2021: உலகின் நம்பர் 1 பவுலரை அணியில் சேர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஆண்ட்ரூ டை விலகியதை அடுத்து, அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி அந்த அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தற்போதிலிருந்தே இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதற்கேற்றவாறு ஐபிஎல் அணிகளும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையி, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டையும் தொடரில் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அண்ட்ரூ டை கூறுகையில்,“ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவது மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும் ஓராண்டிற்கு மேலாக நான் என் குடும்பத்தை பார்க்காமல் உள்ளேன். அதனால் நான் நிச்சயம் இம்முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Shamsi is the Royals' second replacement signing for the remainder of #IPL2021, replacing AJ Tye.
— Rajasthan Royals (@rajasthanroyals) August 25, 2021
இதையடுத்து ஆண்ட்ரூ டைக்கு மாற்று வீரராக உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்ஸியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக இவர் 2016ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அதேசமயம் ஜோஸ் பட்லருக்கு பதிலாக நியூசிலாந்தின் ஜோஷ் பிலீப்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now