
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வார், ஃபாப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தது. ஆனால் சிஎஸ்கேவிற்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டூ பிளெசிஸ் ரன் ஏதுமின்றியும், கெய்க்வாட் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா - மொயீன் அலி இணை களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் அஸ்வின் வீசிய 9ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட மொயீன், அடுத்த பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.