Advertisement

செப்டம்பர் 19ல் ஐபிஎல் 2021 - ரசிகர்கள் கொண்டாட்டம்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 08, 2021 • 11:01 AM
IPL 2021 to resume on September 19 & the final will be played on October 15.
IPL 2021 to resume on September 19 & the final will be played on October 15. (Image Source: Google)
Advertisement

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்தது. 

இந்நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களை எங்கு நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையில் தொடர் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

Trending


இதற்கிடையில் கடந்த மே 29 ஆம் தேதி பிசிசிஐ யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூழலில் அவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்யவும் ஐபிஎல் அணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி, இறுதி போட்டி அக்டோபர் 15ஆம் தேதி வரை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி 25 நள்களில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

இத்தகவலை அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement