
IPL 2022: Auction really important, we will be preparing base for next 5-6 years, says Samson (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபிவர் தொற்றத்தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இதன்காரணமாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு, மெகா வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. மேலும் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சம், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் ஏலம் குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டியளித்துள்ளார்.