
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை மெகா ஏலம், 2 புதிய அணிகள் என பல சுவாரஸ்யங்கள் உள்ளன. இதற்காக ஏற்கனவே ஒவ்வொரு அணியும், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது.
இதனால் அடுத்ததாக மெகா ஏலத்தை நடத்துவதற்கான பணிகள் மட்டும் தான் பாக்கியுள்ளது. முதலில் இந்த ஏலம் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படவிருப்பதாக இருந்தது. ஆனால் அகமதாபாத் அணியின் மீது இருந்த சூதாட்ட புகார் காரணமாக மெகா ஏலம் தள்ளிப்போனது. பின்னர் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வீரர்களின் ஏலம் பிஃப்ரவரி மாதம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் இதற்காக பெங்களூரு நகரத்தில் உள்ள ஹோட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் முழு பட்டியலை விரைவில் வெளியிடப்படவிருந்தது.