
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி வரும் நிலையில் புதிய அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில் டாப்பில் நீடித்து வருகின்றன.முதல் நான்கு இடம்:
இதுவரை 41 லீக் போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் குஜராத், சன் ரைசர்ஸ், ராஜஸ்தான், லக்னோ அணிகள் புள்ளிப் பட்டியலின் முதல் நான்கு இடங்களில் நீடித்து வருகின்றன. 16 புள்ளிகள் பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகிவிடும். குஜராத் அணி 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும், மற்ற மூன்று அணிகளும் 6 போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிட முடியும்.
5ஆவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி அடுத்த 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும், டெல்லி, பஞ்சாப் அணிகள் 6 போட்டிகளில் 4 வெற்றிகளையும் பெற வேண்டும். கொல்கத்தா அடுத்த 5 போட்டிகளிலும் 5 வெற்றிகளை பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும்.