
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.
வீரர்கள் அனைவரும் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வரும் 15ஆம் தேதி முதல் பயிற்சிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மட்டும் 2 வாரத்திற்கும் மேல் தாமதாக ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை சரிகட்டவே அணிகள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி அணியில் எடுக்கப்பட்ட முக்கிய வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரத்திற்கு பங்கேற்க போவதில்லை எனக்கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இது வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நேரடியாக ஐபிஎல் தொடருக்கு வருவதில் சிக்கல் இல்லை. எனினும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.