ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தவான் (9), மயன்க் அகர்வால்(24) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் லிவிங்ஸ்டோன்(2), பேர்ஸ்டோ(9), ஷாருக்கான்(12) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 32 ரன்கள் அடித்தார்.
அதன்பின்னர் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப் அணி.டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.