
IPL 2022 finals: Gujarat Bowlers restricted RR batters by 130 runs (Image Source: Google)
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடிவருகின்றன.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக துணிச்சலான முடிவை எடுத்தார்.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் இணை களமிறங்கியது. இப்போட்டியில் முதல் இரண்டு ஓவர்களை நிதானமாக விளையாடிய இந்த இணை மூன்றாவது ஓவரில் அதிரடி காட்டத்தொடங்கியது.