
IPL 2022: 'Irresponsible shots' - Mumbai Indians' captain Rohit Sharma rues batting failure against (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 37ஆவது ஆட்டமான நேற்று லக்னோவுக்கு எதிராக மீண்டும் மும்பை அணி தோல்வியை சந்தித்தது.
5 முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ், இந்த முறை தொடர்ச்சியாக 8 தோல்விகளை சந்தித்தது ரசிகர்களை மனம் கலங்க வைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். டிக்காக் (10), ஸ்டோய்னிஸ் (0), க்ருணால் பாண்ட்யா (1), தீபக் ஹூடா (10), ஆயுஸ் பதோனி (14) என ஏமாற்றினர். எனினும் மறுபுறம் தூண் போன்று நிலைத்து நின்ற கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் (103 ரன்கள்) சதமடித்து அணியை மீட்டார். இதனால் 20 ஓவர்களில் லக்னோ அணி 168 ரன்களை எடுத்தது.