
IPL 2022: KKR Captain Shreyas Iyer Reveals His Desire To Bat At Number 3 Position (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இம்மாதம் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 12.25 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார் ஸ்ரேயஸ் ஐயர். அவரே கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஐபிஎல் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வரும் 26ஆம் தேதி விளையாடுகின்றன.
இதுகுறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் "விக்கெட் விழாதவாறு பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடுபவராக நினைத்துக்கொள்ள முடியாது. சூழலுக்கு ஏற்ப நான் அதிரடி ஆட்டக்காரராக இருக்கலாம், மற்றொரு வீரர் விக்கெட் விழாதவாறு பார்த்துக்கொண்டு விளையாடலாம். நிலைமைக்கு ஏற்ப சூழலும் பொறுப்பும் வேறுபடும். விக்கெட் விழாதவாறு பார்த்துக்கொண்டு விளையாட ஒரு வீரரை மட்டுமே நம்ப முடியாது.