
IPL 2022: Kohli, Patidar fifty's helps RCB post a total on 170/6 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 43ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
பின்னர் நடப்பு சீசனில் ரன் குவிக்க தடுமாறிவரும் விராட் கோலி இன்றைய போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்த ராஜத் படித்தரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.