
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 24 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய மனீஷ் பாண்டே அடித்து ஆடி 29 பந்தில் 38 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் ஆடினார் கேப்டன் ராகுல். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அடித்து ஆடிய கேஎல் ராகுல் ஐபிஎல்லில் 3ஆவது சதத்தை பதிவு செய்தார். 2ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சதம் விளாசினார் கேஎல் ராகுல். தீபக் ஹூடா 8 பந்தில் 15 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரை அருமையாக வீசிய ஜெய்தேவ் உனாத்கத், அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.