
IPL 2022: Lucknow Super Giants restricted Delhi Capitals by 149 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கும் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியனர்.
இதில் டேவிட் வார்னர் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் அதிரடியில் அசத்திய பிரித்வி ஷா 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.