
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இம்முறை லக்னோ, குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி உள்ளது.
இம்முறை ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு 25% ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2022 தொடரை வெற்றிகரமாக துவங்குவதற்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.