IPL 2022 Mega Auction: Why New Franchises Lucknow, Ahmedabad Have Not Signed Any Player at Draft (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐ.பி.எல் தொடரை சென்னை அணியானது கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து 15ஆவது ஐபிஎல் சீசனானது ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் தற்போது பி.சி.சி.ஐ மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் விளையாடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி அண்மையில் துபாயில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அதிகாரபூர்வமாக தெரிவுசெய்யப்பட்டு இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.