
ஐபிஎல் தொடரின் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் 15ஆவது சீசன் துவங்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் புதிய இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளிலும் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டு மற்றபடி அனைத்து அணிகளும் கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்றார் போல் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் வீரர்களுக்கான மெகா ஏலமும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது அந்த அணியின் முக்கிய வீரரான ஹார்டிக் பண்டியாவை அணியில் இருந்து வெளியேற்றியது. அவரது நீக்கம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சமீபகாலமாக பந்து வீசாமல் ஃபிட்னஸ் இன்றி தவித்து வரும் அவரை வெளியேற்றியது சரிதான் என்று பலரும் கூறி வருகின்றனர்.