Advertisement

ஐபிஎல் 2022: டிசம்பரில் மேகா வீரர்கள் ஏலம் - தகவல்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் பிற்பாதியில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 06, 2021 • 13:32 PM
IPL 2022 Mega Auctions Likely To Be In Held December With Two New Teams Added
IPL 2022 Mega Auctions Likely To Be In Held December With Two New Teams Added (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் விளையாடி வரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

Trending


மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தலா 4 வீரர்களை (2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 வெளிநாட்டு வீரர்) மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை கழட்டிவிட வேண்டும். 

இதனால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement