
IPL 2022: Not Depending On One Or Two Players Is The Reason For Gujarat Titans' Success, Says Rashid (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் இரு புதிய அணிகள் இடம்பிடித்து பட்டையை கிளப்பிவருகின்றன. அதிலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை இழந்த நிலையில், கத்துக்குட்டி அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
இந்நிலையில் தங்களது அணி ஒருவரை மட்டும் நம்பி செயல்படுவதில்லை என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.