
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 29 பந்தில் 29 ரன்கள் அடித்து தேவ்தத் படிக்கல்லும் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், வாண்டர் டசன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர் அடித்து ஆட, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய அஷ்வின் 23 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
சிக்ஸர்களாக விளாசி அரைசதம் அடித்த ஷிம்ரான் ஹெட்மயர் 36 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணி 165 ரன்களை அடிக்க உதவினார். 150 ரன்களை எட்டினாலே பெரிய விஷயம் என்று இருந்த ராஜஸ்தான் அணியை 165 ரன்களை எட்டவைத்தார் ஹெட்மயர்.