
ஐபிஎல் தொடரில் இந்தாண்டு புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் 2 போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் மற்றொரு புதிய அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதன்பின் 2ஆவது போட்டியில் மிகவும் அனுபவம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டியில் 84 ரன்கள் குவித்து குஜராத் வெற்றிக்கு வித்திட்டவர் ஷுப்மன் கில். வெறும் 46 பந்துகளை மட்டுமே சந்தித்து 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி வான வேடிக்கை காட்டினார். முதல் போட்டியில் டக் அவுட் ஆன போதிலும், டெல்லிக்கு எதிராக தனது அதிரடியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஷுப்மன் கில்லின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.