
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடேவில் இன்று நடைபெற்ற போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய பானுகா ராஜபக்சா, ஷிவம் மாவி வீசிய 4ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 9 பந்தில் 31 ரன்கள் அடித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். பவர் பிளேயின் கடைசி ஓவரில் தவான் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பவர் பிளேயில் 6 ஓவரில் 62 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஆரம்பத்தில் வேகமாக உயர்ந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்ததால், அந்த அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை.