Advertisement

ஐபிஎல் 2022: பத்திரிக்கையாளரின் செயலால் கவனம் ஈர்த்த கேகேஆர் வீரர்!

கொல்கத்தா அணியை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் என்ற வீரரை, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் இந்தியரே இல்லை என கூறியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 23, 2022 • 19:11 PM
IPL 2022: Sheldon Jackson bags attention after senior journalist refer him ‘overseas’ player
IPL 2022: Sheldon Jackson bags attention after senior journalist refer him ‘overseas’ player (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் இன்னும் 2 நாட்களில் (மார்ச் 26 ) தொடங்கவுள்ளது. இந்த முறை அனைத்து லீக் போட்டிகளும் மும்பை, புனே நகரங்களிலேயே நடைபெறவுள்ளன.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டி என்பதால், இரு அணிகளின் திட்டங்கள் என்ன, பிளேயிங் 11 எப்படி இருக்கப்போகிறது என முன்னணி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் தான் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Trending


அதாவது கொல்கத்தா அணியில் சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விளையாடுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் டாப் இடத்தில் இவரும் ஒருவர். ஆனால் ஷெல்டன் ஜாக்சனை இந்திய வீரர் எனக்கூறாமல், அயல்நாட்டு வீரர்கள் பட்டியலில் பத்திரிகையாளர்கள் கூறினர். தொடர்ச்சியாக 3 முறை கூறிய போதும் அதனை நிகழ்ச்சி தொகுப்பாளரும் தடுக்காமல் இருந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்தியாவில் முதல் தர கிரிக்கெட்டில் எவ்வளவு சாதனைகள் புரிந்தாலும், இது போன்று இந்தியரே இல்லை என்ற பட்டம் தான் மிஞ்சுகிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று எனக்கூறி, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்ட போதும், அதனை ஏற்காமல் ரசிகர்கள் பதிவுகளை செய்து வருகின்றனர்.

உண்மையில் ஷெல்டன் ஜாக்சன் குஜராத்தில் பிறந்த 27 வயது இந்திய வீரராவார். சௌராஷ்டிரா அணிக்காக் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர், இதுவரை 79 போட்டிகளில் 5,947 ரன்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். இவ்வளவு சிறப்பாக ஆடியும், ஐபிஎல் தொடரில் 4 ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் வந்த இளம் வீரர்கள் கூட ஐபிஎல் தொடர் மூலம் புகழடைந்துள்ளனர். ஆனால் ஷெல்டன் போன்ற திறமையான வீரர்களுக்கு நீண்ட வருடங்கள் ஆனாலும் கூட ஐபிஎல்-ல் இடம் கிடைக்க வில்லை. இதனால் அவர்களின் அடையாளம் கூட ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement