
IPL 2022: Shreyas Iyer appointed captain of KKR (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டு அணிகள் கோடிகளை கொட்டின. அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அணிகள் வீரர்களை தேர்வு செய்தன. முதலில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் ஏலம் விடப்பட்டது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் வந்ததும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏன் என்றால் பல அணிகளுக்கு கேப்டன் இல்லை. ஸ்ரேயாஸை குறிவைத்தால் புதிய கேப்டன் கிடைத்துவிடுவார் என்பது தான் காரணம். ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றில் 87 போட்டிகளில் விளையாடி 2375 ரன்கள் அடித்துள்ளார். அவரது ஸ்டரைக் ரேட் 123 ஆகும்.
இளம் வீரர், எதிர்காலத்தில் இந்திய அணியையே வழிநடத்தி செல்லும் பொறுப்பு என பல திறமை உள்ளதால், இவர் இடம்பெறும் அணி பெல மடங்கு பலம் பெரும்.