Advertisement

ஐபிஎல் 2022: மார்க்ரம் அதிரடியில் ஹைத்ராபாத் அசத்தல் வெற்றி!

ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 17, 2022 • 19:13 PM
IPL 2022: Sunrisers Hyderabad beat Punjab Kings by 7 wickets
IPL 2022: Sunrisers Hyderabad beat Punjab Kings by 7 wickets (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸூம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன.

இரு அணிகளுமே இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 4வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. 

Trending


இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் தவான் (8) மற்றும் பிரப்சிம்ரான் சிங் (14) ஆகிய இருவருமே ஏமாற்றமளிக்க, 3ம் வரிசையில் இறங்கிய பேர்ஸ்டோவும் 12 ரன்னில் நடையை கட்டினார். அதன்பின்னர் லியாம் லிவிங்ஸ்டோன் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில் ஜித்தேஷ் ஷர்மா 11 ரன்னிலும், ஷாருக்கான் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷாருக்கான் 28 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அபாரமாக பந்துவீசி ஏற்கனவே தவான் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் வீழ்த்தியிருந்த புவனேஷ்வர் குமார், 33 பந்தில் 60 ரன்கள் அடித்த லிவிங்ஸ்டோனையும் வீழ்த்தினார். 19 ஓவரில் பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக், அந்த ஓவரில் ரன்னே விட்டுக்கொடுக்காமல் ஒடீன் ஸ்மித், ராகுல் சாஹர், வைபவ் அரோரா ஆகிய மூவரையும் வீழ்த்த, அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் ரன்னே விட்டுக்கொடுக்காமல் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உம்ரான் மாலிக் கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசியதால், 20 ஓவரில் 151 ரன்கள் மட்டுமே அடித்தது பஞ்சாப் அணி. 

அதன்பின் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதன்பின் 31 ரன்னில் அபிஷேக் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - நிக்கோலஸ் பூரன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

தொடர்ந்து இறுதிவரை களத்தில் இருந்த இந்த இணை 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 41 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 35 ரன்களையும் சேர்த்தனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement