Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: ஹைதராபாத் பேட்டர்களைக் கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 22, 2022 • 21:16 PM
IPL 2022: Sunrisers Hyderabad Finishes off 157/8 on their 20 overs
IPL 2022: Sunrisers Hyderabad Finishes off 157/8 on their 20 overs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசனின் கடைசி லீக் ஆட்டம் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் பிரியம் கார்க் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Trending


அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் த்ரிபாதி 20 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த ஐடன் மார்க்ரம் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - ரொமாரியா ஷெப்பர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிரங்கிய ஜெகதீசா சுஜித்தும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் புவனேஷ்வர் குமாரும் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement