
IPL 2022: Suresh Raina Joining Gujarat Titans? - Former Cricketer's Social Media Post Leaves Netizen (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் நேற்று அறிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த ராய், கரோனா சூழலால் இருக்கும் பயோ - பப்புள் நிலையால் சோர்வடைந்துள்ளதாகவும், இந்த நேரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடவிருப்பதாகவும் கூறி, ஐபிஎல் தொடரில் விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்க வேண்டும் என்று இன்று காலை முதலே ரசிகர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால், காலை முதல் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா பெயர்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ரெய்னாவை, சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்க முன்வரவில்லை.