
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 31ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய மேத்யூ ஷார்ட் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கட்டை இழந்தார். அதன்பின் பிரப்சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த டைட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்பின் 28 ரன்களில் பிரப்சிம்ர்ன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் 10 ரன்களிலும், அதர்வா டைட் 29 ரன்களிலும் என அடுத்தடுத்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.