
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவின் சுழல் பந்துவீச்சில் சிக்கி சுருண்டது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி . ரோகித் தவிர்த்து, இஷான் கிஷன் முதல் அர்ஷத் கான் வரையிலான மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ரவீந்திர ஜடேஜாவும், மிட்செல் சான்ட்ரும் சேர்த்து கட்டுப்படுத்தினர். சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சாட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மகளா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வழக்கம் போல டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் முதல் ஓவரிலேயே கான்வேவை ரன் ஏதுமின்றி வெளியேற்றினார் பெஹ்ரன்டோர்ஃப். அதன்பின் களம்புகுந்தார் சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே. இந்த சீசனில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.