
IPL 2023: BCCI in big FIX over IPL 2023 FINAL DATE, ‘Players’ availability in playoffs could be ISS (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு முதல் முறையாக பழைய வடிவத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறகிறது. அதாவது, சொந்த மண்ணில் 7 போட்டி மற்றும் வெளியூரில் 7 போட்டிகள் என ஒவ்வொரு அணியும் விளையாட உள்ளது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை மார்ச் 31ஆம் தேதி அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்க பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. சுமார் 2 மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி அல்லது ஜூன் 4ஆம் தேதி முடிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. கடந்த முறை குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இம்முறை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் முதல் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.