Advertisement

ஒரு அணியாக செயல்பட்டால் நிச்சயம் முடிவு நமக்கு சாதகமாக அமையும் - நிதிஷ் ராணா!

உங்களுடைய ஓய்வு அறையில் அனைவருமே மிகச் சிறந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போட்டியின் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 27, 2023 • 13:45 PM
IPL 2023: Belief Has Always Been There That We'll Bounce Back, Says Nitish Rana After KKR's Win Over
IPL 2023: Belief Has Always Been There That We'll Bounce Back, Says Nitish Rana After KKR's Win Over (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 16ஆவது சீசனின் இரண்டாம் பாதியின் தொடக்க போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணியால் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டாவது போட்டியில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. எட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும்.

Trending


இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், “கடைசி மூன்று நான்கு போட்டிகளாக இதைத்தான் கூறி வருகிறேன். எப்பொழுதுமே ஒரு அணியாக நாம் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் முடிவு நமக்கு சாதகமாக அமையும். உங்களுடைய ஓய்வு அறையில் அனைவருமே மிகச் சிறந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போட்டியின் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஏற்கனவே நாங்கள் இந்த தொடரின் ஆரம்பத்தில் அடைந்த தோல்விகளுக்கு பின்னரும் நம்பிக்கையுடன் இருந்ததால் நிச்சயம் இந்த தொடரில் மீண்டும் வரமுடியும் என்று நினைத்தேன். அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். இந்த போட்டியில் முதலில் நாங்கள் பெரிய ஸ்கோரை அடித்து பெங்களூரு அணிக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தோம். 200 ரன்கள் கிடைக்க இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் அவர்களை வீழ்த்த நினைத்தோம். சுயாஸ் ஷர்மா எந்த ஒரு கட்டத்திலும் பவுலிங் செய்ய தயாராக இருக்கிறார். அதோடு அவர் இன்றைய போட்டியில் பந்துவீசிய விதம் அசத்தலாக இருந்தது” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement