
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து அணிகள் கலந்து கொள்ள அதில் ஹைதராபாத் மற்றும் குஜராத் இரு அணிகளில்தான் வீரர்கள் யாரும் காயமடையாமல் ஏலத்தில் வாங்கியது போல எல்லோரும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் மற்ற எல்லா ஐபிஎல் அணிகளிலும் குறைந்தது ஒருவராவது காயம் அடைந்திருக்கிறார். இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அணியாக மும்பை அணி பும்ரா மற்றும் ரிச்சர்ட்சன் இருவரையும் இழந்திருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் சென்னை அணி தனது இளம் இடது கை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரியை இழந்திருக்கிறது. இவர் பவர் பிளே பந்துவீச்சாளர் என்பதால், இவரை முதலில் ஓவர்களை வீசவைத்து பின்பு வெளிநாட்டு பந்துவீச்சாளரை இம்பேக்ட் பிளேயர் ரூலில் டெத் ஓவர்களுக்கு கொண்டுவர சென்னை அணி திட்டமிட்டு இருந்தது. தற்பொழுது இவர் காயம் அடைந்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியதால் இந்த திட்டத்தில் சென்னை அணி பின்தங்கி விட்டது.