
ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டி இது என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தேனி முதலில் பந்துவீச தீர்மானித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவர் முதலே அதிரடி காட்டிய இந்த இணை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளியது. அதன்பின் 21 ரன்களைச் சேர்த்திருந்த ரோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுமுனையில் அதிரடி காட்டி வந்த இஷான் கிஷானும் 32 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.