
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சிஎஸ்கே தொடக்க வீரர் டெவான் கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த சூழலிலும் சரியான நேரத்தில் அதிரடியை கையில் எடுத்து அணி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கான்வே-யின் பேட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது சிஎஸ்கே வீரர் கான்வே கூறுகையில், “இன்றையப் போட்டியில் வென்றது மகிழ்ச்சி. முதல் சில போட்டிகளில் என்னால் சரியாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. என்னுடைய பேட்டிங்கில் புதிதாக எதுவும் கிடையாது. வழக்கமாக விளையாடுவது போல் சிறந்த கிரிக்கெட் ஷாட்களை விளையாடவே முயற்சிப்பேன். பிரஷரில் இருக்கும் போது அதற்கேற்ப முயற்சிகளை செய்வேன்.