Advertisement

ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து பிராவோ வெளியேற்றம்!

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் டுவைன் பிரேவோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 15, 2022 • 19:42 PM
IPL 2023: CSK Have Released Dwyane Bravo!
IPL 2023: CSK Have Released Dwyane Bravo! (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

Trending


அந்த வகையில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது. 

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது. வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்துள்ளதால் விரைவில் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடும் என தெரிகிறது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விபவரங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement